Saturday, June 12, 2021

கொரொனா காலத்தில் மனநல மருந்துகள்

 பலரும் சமீபமாக என்னைத் தொடர்புகொண்டு கேட்பது மூன்று விஷயங்கள்தான்

எனக்கு கொரொனா வந்துவிட்டது உங்கள் மருந்துகளை தொடரலாமா?
கொரொனா இருக்கும்போது உங்கள் மருந்துகளால் பாதிப்பு வராதா?
மனநல மருந்துகள் எடுக்கும் போது கொரொனா தடுப்பூசி போடலாமா?
இதில் முதல் கேள்வி இருக்கும்போது கொரொனா மருந்துகள் தொடரலாமா என்பது இதற்கு நேரடியான பதில் கிடையாது காரணம். மனநல மருந்துகள் கொரொனாவுக்காக கொடுக்கப்படும் சிகிச்சையிலும், கொரொனாவின் அறிகுறிகளையும் எப்படி பாதிக்கும் என்பது மருந்தைப் பொருத்து வேறுபடும் நீங்கள் எடுக்கும் மருந்துகள் எது என்று தெரியவரும்போதுதான் அதற்கு ஏற்ற மாதிரி பரிந்துரை செய்ய முடியும் ஆகவே உங்களுக்கு கொரொனா பாதிப்பு என்று உறுதி செய்யப்பட்டால் உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்
அவ்வாறு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிட்டால் எந்த பாதிப்பும் வராதா? இதற்கு முன்னால் நடந்த ஆய்வுகளின் முடிவுகளை வைத்தே இந்த கேள்விக்கு பதில் கூறமுடியும். மனநல மருந்துகள் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. வைத்தியம் செய்யப்படாத மனநோய்கள் இருந்தால் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் தீவிரமாக இருப்பதாகவே இதற்கு முன் நடந்த பல ஆய்வுகள் கூறுகின்றன ஆகவே மனநல மருந்துகள் உங்கள் வியாதியை எதிர்கொள்வதற்கு மிகவும் முக்கியம். அவற்றை நிறுத்த வேண்டாம்.


மனநல மருந்துகள் எடுக்கும் போது தடுப்பூசி போடலாமா என்றால் அதற்கு என் பதில் - கட்டாயம் போடலாம். இன்றைய நிலைமையில் கொரொனாவை எதிர்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி தடுப்பூசிகள் மட்டும்தான். ஆகவே அனைவரும் அது கோவீஷீல்டாக இருந்தாலும் சரி கோவாக்ஸினாக இருந்தாலும் சரி கட்டாயம் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதற்கும் மனநல மருந்து எடுப்பதற்க்கும் தொடர்பிருப்பதாக இதுவரையில் எந்த ஆய்வும் இல்லை. பொதுவாக கேள்விப்பட்டதிலும் என் தனிப்பட்ட அனுபவத்திலும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு வரும் வியாதி மிக மிக தீவிரம் குறைவாக உள்ளது. தடுப்பூசி போட்டவர்களில் உயிரிழந்தவர்கள் என்பது மிக மிக அபூர்வமாகவே உள்ளது ஆகவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........